Monday, April 26, 2010

தனுஸ்கோடியின் கடற்காற்று




ஓங்கி அடித்தாலும் அந்த உப்பு காற்றுக்கு
ஒரு சுகமுண்டு அந்நாளிலே!
தென்றலாய் இருந்தும் அதில் வந்த வாடையில்
ஏனோ தமிழன் முகம் கோண!
வந்த வாடை என்ன கருவாட்டு வாடையா? அல்லவே!
அது சுகமான சுமையன்றோ!
எங்கள் ஊரில் நோய்பட்ட இலவொன்றும்
அண்மையில் இல்லையே!
காற்றின் திசையில் கடல் தாண்டி
தமிழன் கனவு தனி ஈழமோ! சிதைக்கப்பட்ட பிண ஈழமாய்!
சிதைக்கப்பட்டது தமிழன் என்னும் அப்பாவியின்
கனவு மட்டுமல்ல! பிணமும் தான்!
சிதைபட்ட பிணங்களுக்குள் தமிழன் அங்கே!
தன் இனத்தின் பிணவாடை கூட அறியாமலும்
சில தமிழர்கள் இங்கே!
-குட்டி

ஆசிரியர் - சிறுகதை – குட்டி

பல நாட்கள் கழித்து தான் படித்த கல்லூரியிலேயே புரபசர் பதவியில் கல்லூரிக்குள் நுழைந்த சந்தோசத்தில் கல்லூரியை அந்த மாலை நேரத்தில் சுற்றி பார்க்க கிளம்பினான் ராஜா.ஆனால் எதோ நெருடல் மனதில் இருந்து கொண்டே இருந்தது. மாணவனாய் இவனையும் இவனது நண்பர்கள் பற்றியும் மொத்த கல்லூரியும் அறிந்த விசயம், ஒரே வார்த்தையில் சொன்னால் முரடர்கள்.
அந்நாள் ஒரு மாலை தன்னுடய நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் நிற்கையில் அவ்வழியே சென்ற அவனது ஆசிரியர் அவர்களை பார்த்து பேசிய வார்த்தைகள் "இந்த கல்லூரிய சுத்துன கழுத எங்கயும் போகாதாம்- போய் பொழைக்கற வழிய பாருங்கடா".பேசிய வார்த்தைகள் பொறுக்காமல் அவரை பழி தீர்க்க அன்றிரவே அவரது விடுதி அறையில் தீ வைத்து விட்டு, அவரை அடுத்த நாள் அதே இடத்தில் கேலி செய்தது ஞாபகம் வந்தது. “மன்னிப்பு என்பதே கிடையாது வாத்தி” எனக்கூற அவரோ கூனி குறுகி போனார். சொல்ல முடியாத வேதனையில் அவர் தவித்ததை பார்த்து பார்த்து ரசித்தவர்கள் இவர்கள். ஆனால் இன்றோ அதே கல்லூரியின் புரபசராக புன்முறுவலோடு வாழ வேண்டிய கட்டாயத்தில் அந்த பழைய மாணவனும்.

சூரிய உதயத்தை பார்த்து பல வருடங்கள் கடந்திருந்தது. வாழ்க்கையின் கட்டாயம் செய்த கோலம், அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு இன்றே தயாராக வேண்டி இருந்தது அதிகாலையில். ஆசிரியர்களின் வகுப்புகளை புறகணிப்பதும், கிண்டல் செய்வதும், வகுப்புகளை பாதியில் நிறுத்துவதும் பொழுதுபோக்காய் இருந்த அவனுக்கு தற்போதய இடம், பொருள், ஏவல் எல்லாம் உறுத்தியது. எப்படி வாழ்ந்தவன் நான் இந்த கல்லூரியில் ராஜாவாய், மந்திரியாய், பெண்களின் கதாநாயகனாய். ஆனால் ஏதோ உறுத்தியது கண்டு பிடிக்க முயற்சித்தும் முடியாமல்.
அன்று அவன் நடத்த வேண்டிய பாடம் "வாழ்க்கையில் முன்னேற கடைபிடிக்க வேண்டிய விசயங்கள்"என்ற தலைப்பில். நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என துவங்கி பொரியவர்களை எந்த அளவு மாரியாதையுடன் நடத்த வெண்டும் என்பது வரை அரை மணி நேரம் பேச, வழக்கமான மாணவர்கள் வழக்கம் போல் பேசி கொண்டும், சிரித்து கொண்டும், ஆசிரியரை கிண்டல் செய்வதுமாய் இறுக்க. கோபம் கொப்பளிக்க, உதடுகள் முனக முயற்சிக்க கட்டுப்படுத்தியவனாய் தனது அழைப்பு துண்ட்டிக்கபட்ட செல்பேசியுடன் மன்னிப்பு கேட்டு வகுப்பின் வெளியே சென்றான். தனது உறுத்தலுக்கு பதில் கண்டவனாய் வகுப்பறைக்குள் ஒரு தெளிர்ச்சியுடன் நுழைந்தான். ஞான ஒளி பெற்றவனாய் அடுத்த ஐந்து நிமிடங்கள் பேசிய விசயம் " வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நாளை வரும் பிரச்சனைகளை இன்றே அறிய வேண்டும்,அதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் பதில் கூறும் முன்னும் அவர்களுக்கு கட்டளைகள் இடும் முன்னும் அவர்களது ஸ்தானத்தில்(இடத்தில்) இருந்து யோசித்து செயல்பட வேண்டும்"என உணர்ந்தவனாய் பேசி வகுப்பை முடித்துக்கொண்டான்.
பலவருடங்கள் படித்த கல்லூரி பாடம் தராத அறிவை அவனுக்கு வழ்க்கை பாடம் தந்திருந்தது. வகுப்பு முடிந்து கிளம்பும்போது ஒரு சந்தோசம் வந்திருந்தது. நேரமே கல்லூரியில் இருந்து கிளம்பினான் அவனது ஆசிரியரை பார்த்து மன்னிப்பு கேட்பதற்காகவும், பல வருட மன உறுத்தலை மறப்பதற்காகவும்.

Saturday, January 2, 2010

மறப்பதும் மன்னிப்பதும்

மறப்பதும் மன்னிப்பதும்
மனிதநேயம் என்றோம்!
நாங்கள் கூறியது தவறை,
நீங்கள் மன்னித்து
மறந்துபோனது மனிதனை!!
-குட்டி

மனிதநேயம்


மனிதநேயம் மரத்துப்போன மனிதமும்
மனித நேயம் மறந்து போன மனிதனும்
பொறாமை மிகுந்து போன கூட்டமும்
பொறுமை இழந்து போன தலைவனும்
எந்நாட்டின் சொத்தெனில் யாரிவர்கள்
மடமையை பறித்தெடுத்து காட்டுவர்?

சிறான் முதற் கிழாற் வரை
சுயநலமெனும் சூழ்ச்சியே மூச்சு எனில்
சிற்றெறும்பை காப்பாற்றும் சிறந்தானை
சல்லடையாய் சலித்தாலும் சந்தர்ப்ப
சூழ்நிழையால் சந்திப்பேனா? இது ஒரு சாபக்கேடா?

மடமை போற்றும் களைகளினுள்
மனிதமொன்று கண்டேன் குற்றுயிறும் குழையுயிறுமாய்
மண்ணைவிற்று பொன்னை விற்று என்
மனதின் மனிதநேயம் காப்பாற்றுவேன்!
அட நண்பரே! அது உன்னுள்ளும் அதே நிலையில்!
அடை காக்கும் கோழியாய் உயிரிட்டு காப்பாயா?
உன் சந்ததிக்கும் அதை காட்டிடுவோம்!
வரலாற்று சின்னமாய்!
                -        குட்டி

Thursday, November 12, 2009

அரசியல்வாதி - குட்டி


- குட்டி

நீ என் முதுகில் குத்தினாய்
நான் உன் நெஞ்சில் குத்தினேன்
நீ புரணி பேசினாய்
நான் மேடை போட்டு உன்னை உருக்குலைத்தேன்
நீ கூடவே இருந்து குழி பறித்தாய்
நான் உன்னை அதிலே போட்டு மூடிவிட்டேன்
நீ அரசியல் செய்தாய்
நான் அட்டூழியம் செய்தேன்
நீ என்னை பேடி என்றாய்
நான் இல்லை என நிரூபித்து காட்டினேன்
நீ குழைத்தாய்
நான் கடித்தேன்
நீ சொல்லால் அடித்தாய்
நான் கல்லால் அடித்தேன்
நீ என் உழைப்பை உரிந்தாய்
நான் உன் ரத்தத்தை உரிந்தேன்
நீ நியூட்டனின் இரண்டாம் விதியை மட்டும் உபயோகித்தாய்
நான் மூன்று விதிகளையும் சேர்த்து உபயோகித்தேன்

முள்செடி என்னை குத்தியது


வேரோடு அதை பிடுங்கி எறிந்தேன்
என்னாடா உலகம் இது
"எய்தவன் அங்கிருக்க அம்பை நொந்து கொள்கிறார்கள்"
ஆம், இந்த உலகுக்கு
நீ நல்லவனாம்
நான் கெட்டவனாம்
என்னை மன்னித்துவிடுங்கள் மக்களே!
இந்த சந்தர்ப்பவாத உலகில்
நானும் ஒரு சாமர்த்தியமான சந்தர்ப்பவாதிதான்
சத்தமில்லாமல் அரசியல்வாதியாக!
*

Tuesday, November 10, 2009

ஹைக்கூ...

ஹைக்கூ...
மனிதம் மரத்துப்போன உலகில்
இன்னும் நான் ஒரு மானுடனாய்,
நானும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
மனசாட்சியுடன் மிருகமாய்..

Thursday, October 22, 2009

பயணி : சிறுகதை - குட்டி


- குட்டி


ந்த மருத்துவனுக்கு பொழுதுபோக்கு ஊர் சுற்றுவது. சில நாட்களாய் பயணங்கள் இல்லாமல் சோம்பேறி ஆகியிருந்தான்.

நினைவலைகள் சுழல... தன்னுடைய கேரளத்து நண்பர்கள் நினைவில் வர, தொலைபேசி உரையாடலின் முடிவாய் கேரளத்து பயணம் ஆரம்பமானது.

ஓணம் பண்டிகையும் அந்த பயணத்திலேயே இணைந்தது.

மாலை வேளையில் மழை தூரலுடன் திரிச்சூரை அடைய, வரவேற்பு அமர்க்களப்பட்டது.

அன்று மது கடைகளுக்கு விடுமுறை என்பதால், இருமடங்கு விலையில் வாங்கப்பட்ட மதுவுடன் இரவு கேளிக்கை இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடந்தது.

வாடகை வீட்டில் பட்ட படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு படிக்கும் அவர்களுக்கு வழக்கமான மெஸ், ஒணத்தால் விடுமுறையில் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த மதுவுடன் கடற்கரைக்கு சென்றனர். கடற்கரை கள்ளுகடையில் இரண்டு பாட்டில் கள் குடித்தனர்.

ஊர் சுற்றிவிட்டு நல்ல உறக்கம் கண்ட பயணிக்கு காலை விடிந்ததும் உறைத்தது வந்ததிலிருந்தே நண்பர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது.

ஓணத்துகாக விடுமுறை என்பதால் ஊர் சென்று விட்டனரோ என வினவ, மற்றவர்கள் எல்லோரும் இன்னொரு வீட்டில் படித்துகொண்டிருப்பது தெரிந்தது.

மாநிலம் தாண்டி வந்து படிக்கும் நண்பர்களை, மாநிலம் தாண்டி வந்து கெடுப்பது உறைத்தது.

நண்பர்களை நன்கு படிக்குமாறு கூறிவிட்டு ஊர் திரும்பினார்.

சில நாட்கள் கழிய டெல்லி நண்பன் நினைவு வர, தொலைபேசி உரையாடலுடன் டெல்லி பயணம் ஆரம்பமானது..!