Thursday, October 22, 2009

பயணி : சிறுகதை - குட்டி


- குட்டி


ந்த மருத்துவனுக்கு பொழுதுபோக்கு ஊர் சுற்றுவது. சில நாட்களாய் பயணங்கள் இல்லாமல் சோம்பேறி ஆகியிருந்தான்.

நினைவலைகள் சுழல... தன்னுடைய கேரளத்து நண்பர்கள் நினைவில் வர, தொலைபேசி உரையாடலின் முடிவாய் கேரளத்து பயணம் ஆரம்பமானது.

ஓணம் பண்டிகையும் அந்த பயணத்திலேயே இணைந்தது.

மாலை வேளையில் மழை தூரலுடன் திரிச்சூரை அடைய, வரவேற்பு அமர்க்களப்பட்டது.

அன்று மது கடைகளுக்கு விடுமுறை என்பதால், இருமடங்கு விலையில் வாங்கப்பட்ட மதுவுடன் இரவு கேளிக்கை இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடந்தது.

வாடகை வீட்டில் பட்ட படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு படிக்கும் அவர்களுக்கு வழக்கமான மெஸ், ஒணத்தால் விடுமுறையில் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த மதுவுடன் கடற்கரைக்கு சென்றனர். கடற்கரை கள்ளுகடையில் இரண்டு பாட்டில் கள் குடித்தனர்.

ஊர் சுற்றிவிட்டு நல்ல உறக்கம் கண்ட பயணிக்கு காலை விடிந்ததும் உறைத்தது வந்ததிலிருந்தே நண்பர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது.

ஓணத்துகாக விடுமுறை என்பதால் ஊர் சென்று விட்டனரோ என வினவ, மற்றவர்கள் எல்லோரும் இன்னொரு வீட்டில் படித்துகொண்டிருப்பது தெரிந்தது.

மாநிலம் தாண்டி வந்து படிக்கும் நண்பர்களை, மாநிலம் தாண்டி வந்து கெடுப்பது உறைத்தது.

நண்பர்களை நன்கு படிக்குமாறு கூறிவிட்டு ஊர் திரும்பினார்.

சில நாட்கள் கழிய டெல்லி நண்பன் நினைவு வர, தொலைபேசி உரையாடலுடன் டெல்லி பயணம் ஆரம்பமானது..!

No comments: