Monday, April 26, 2010

விலங்குகளும் -விளங்காதவைகளும்!

கடல் கடந்து கப்பம்
கட்டுகிறானாம் தமிழன்
தன் சொந்த நாட்டிலேயே!
வீர வணக்கத்திலும்
விஷம விளையாட்டு!
வெட்கங்கெட்டவர்கள்!
நாம் என்ன செய்ய முடியும்?
இது தான் என் மக்களின் கேள்வி !
ஆயிரம் ஆயிரம் பிணங்கலாம் ஈழத்திலே!
இங்கோ நாற்காலி சண்டை!
மவுனம் காக்கும் மேலை நாடுகள்!
இறந்தவன் கிருத்துவனோ முஸ்லிமோ இல்லையாம்!
இறந்த எங்கள் தமிழர்கள் விலங்குகளை விட கேவலமா?
ப்ளூ கிராஸ் கூட வாய் திறக்கவில்லையே!
மனம் உடைந்து தற்கொலையாம்!
அதற்கு அரசு பணமாம்!
இறந்தவனுக்கு பணம் எதற்கு!
தற்கொலை காரணத்திற்கு முடிவில்லாமல்!

- குட்டி

No comments: