Wednesday, May 26, 2010

கருச்சிதைப்பு - குட்டி


சுகம் பெற்று
சுகம் கொடுத்த
ஆண், பெண் இருவருக்கும்
எங்கே போனது அறிவு?
தவறிழைத்த அவர்கள்
தலைநிமிர்ந்து, கண் திறந்து
உலகை நோக்க!
உலகமறியாத, கண்திறக்காத,
தலைநிமிராத என்னை ஏன்
கருவறையில் கறி கத்தரிக்காயாய் சிதைத்துவிட்டீர்!
காமம் என்ற கள்ளத்தனத்துக்காக!
ஆணுறையிட்டிருந்தால் என்
சாபம் உனக்கில்லையே!
அரசாங்கம் அறிவித்திருக்கிறதாம்
நீங்களும் சிதைபடுவீர்! சிறைக்குள்ளே!
அது மருத்துவனானாலும் மானுடனானாலும்
மன்னிப்பதற்கில்லையாம்!!
      - குட்டி

No comments: